ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் குடமுழுக்கு - புகைப்படங்கள்
திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலின் உபகோயிலான ஸ்ரீலட்சுமி வராஹன் கோயில் குடமுழுக்கு விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலின் உபகோயிலான ஸ்ரீலட்சுமி வராஹன் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்த பட்டாச்சாரியர்கள்.
பிரசித்தி பெற்ற ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலின் உபகோயிலான ஸ்ரீலட்சுமி வராஹன் கோயில் குடமுழுக்கு விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காலை 6.45 மணிக்கு மேல் யாக சாலையில் இருந்து பூஜை செய்த புனிதநீர் கலசங்களை பட்டாச்சாரியார்கள் மேளதாளம் முழங்க கோயிலைச் சுற்றி வலம் வந்தனர்.
புனிதநீர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீலட்சுமி வராஹன் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும் நடைபெற்றது.