சித்திரை மாதத்தை சிறப்பிக்கக்கூடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா.
சித்திரை திருவிழாவையொட்டி, மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும்.-
விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ANI
மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ANI
மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் 19ஆம் தேதியும், திக் விஜயம் 20ஆம் தேதியும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 21ஆம் தேதியும், 22ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வரும் 22-ம் தேதி கள்ளழகர் எதிர் சேவையும், 23-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளன.