முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இதில் வாஜ்பாய் அவர்களின் வளர்ப்பு மகளான நமிதா கவுல் பட்டாச்சார்யா மற்றும் பேத்தி நிஹாரிக்காவும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.