தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெற்றிப்பெற்ற ஹீரோ படத்தில் நாயகியாக அறிமுகமானார் கல்யாணி.
சிம்புவிற்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்துள்ளார்.
முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.
தயாரிப்பாளரான பிரியதர்சன் மற்றும் மலையாள நடிகை லிஸ்சிக்கும் மகளாக பிறந்தார்.
சென்னையில் தனது பள்ளிப்படிப்பினை முடித்தார்.
சிங்கப்பூரில் தனது மேற்படிப்பை முடித்துள்ளார்.
தனது பள்ளிப் படிப்பை முடித்தபிறகு, நியூயார்க் நகரத்திலுள்ள 'பார்சன்ஸ் ஸ்கூல் ஆப் டிசைன்' கல்லூரியில் சேர்ந்து கட்டிடக்கலை வடிவமைப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
மலையாளத்தில் வெளியான வரானே அவசியமுண்டு படத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
மலையாளத்தில் அரபிக்கடலின்டே சிம்ஹம், ஹிருதயம், ப்ரோ டாடி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
மலையாளம், தெலுங்கு, தமிழ் என மாறி மாறி நடித்து வருகிறார்.