பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர்களிலிருந்து கட்டுக்கட்டாக கரும்புகள், வாழைத்தார்கள், மஞ்சள் கிழங்குகள் உள்ளிட்டவை வந்திறங்கியுள்ளன. இந்நிலையில் ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில், பொங்கல் சிறப்பு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு சந்தையில், கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள் கொத்து, மண்பானை, வாழை இலை உள்ளிட்ட, பண்டிகையை கொண்டாட தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்பது கூறிப்பிடத்தக்கது.