தெய்வங்களில் முழுமுதற்கடவுள் விநாயகர். பண்டிகைகளிலும் தலையாயது விநாயகர் சதுர்த்தி. விநாயகரை வழிபட்ட பலன் கிட்டும்.
பிடித்துவைத்தால் பிள்ளையார். தூய மனதுடன் பிடித்து வைத்து மஞ்சள் குங்குமம் சாத்தி வணங்கினால் அதில் பிள்ளையார் ஆவாகனமாகி அருள்பாலிப்பார் என்பதே நம்பிக்கை.
சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
பல்வேறு வடிவிலான பிள்ளையார் சிலைகள் 3 அடி முதல் 15 அடி உயரம் வரையில் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து வழிபட தயார் நிலையில் உள்ளன.
இந்த ஆண்டு புதுவரவு விநாயகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன.
விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலை வைத்தும் வழிப்படுவது வழக்கம்.
பல அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டு பின்னர் கடலில் சிலைகளை கரைத்து வருவது வழக்கம்.
ராஜ விநாயகர், ஆதி விநாயகர், சிவன் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரித்துள்ளனர்.
சதுர்த்தி விழாவையொட்டி வீடுகளில் மக்கள் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்குவர்.