தில்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 15-ஆம் தேதியன்று ராணுவ தினம் அனுசரிக்கப்படுவதையெட்டி இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள அமர் ஜவானில், நாட்டுக்காக இன்னுயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு, ராணுவத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
74வது ராணுவ தினத்தை முன்னிட்டு தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவனே, விமானப்படை தளபதி விஆர் சவுதாரி மற்றும் கடற்படை தளபதி ஆர் ஹரி குமார்.
தில்லி கேஎம் கரியப்பா பரேட் மைதானத்தில் ராணுவ தின அணிவகுப்பின் போது காட்சிக்கு வைக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை.
இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில், பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
முப்படைகளின் பெருமை, சாகசம், வீரம் உள்ளிட்ட பல அம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன.
ராணுவ தினத்தையொட்டி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் ஜனவரி 15-ந்தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
பாட்னாவில் ராணுவ தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய பீகார் ரெஜிமென்ட் ஜவான்கள்.