நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் முப்பரிமாண லேசர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி.
குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுபாஷ் சந்திர போஸின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பாட்னாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் உள்ள சுபாஷ் பூங்காவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சண்டிகரில் உள்ள பூங்காவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் திறந்து வைத்தார்.
லக்னோவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களுக்கு போஸ் கொடுத்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.
பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா 'மைக்ரோ நன்கொடை பேரணி' அமைப்பில் உரையாற்றிய முன் நேதாஜியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.