ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகைப் பகுதியில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர்.
வருடாந்திர அமர்நாத் யாத்திரையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இமயமலையில் உள்ள குகைக் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
ஆண்டுதோறும் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வர்.
இந்துக்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான புனித பயணமாக இது கருதப்படுகிறது.
வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை அமர்நாத் யாத்திரை நடைபெறும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகள் அனைத்திற்கும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் வரும் பக்தர்கள்.
மக்கள் பாதுகாப்பான வகையில் அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் அமர்நாத் யாத்திரைக்கு வந்தபோது தனது தாய் மற்றும் இந்திய ராணுவத்துடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.