அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபதிருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பணிகள் தொடங்க 30.09.2019 அன்று காலை 5:30 - 7:05 மணிக்குள் பந்தகால் நடும் வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் தீபாரதனை மற்றும் திருத்தேர்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்ற பின் ராஜகோபுரம் எதிரே பந்தகால் நடப்பட்டது.