சென்னையில் வியாழக்கிழமை மாலை தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை விடிய விடிய தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் சென்னை மெரீனா கடற்கரை சாலையில் நேப்பியர் பாலம் முதல் விவேகானந்தர் இல்லம் வரை சாலையின் இருபுறமும் மழை நீர் வெள்ளம் போன்று தேங்கியுள்ளது. கனமழை காரணமாக, இயக்கப்படும் பேருந்துகளின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டதால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.