சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடர்ந்து 5வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார். கடைசி நாளான இன்று நிகழ்ச்சியில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அவர் 20 வருடங்களுக்கு முன்பிருந்த ரசிகர்கள், இப்போதும் அதே உற்சாகத்துடன்தான் இருக்கிறார்கள். அவர்களை நான் நேரடியாகப் பார்க்கும்போது, சிலருக்கு வயதாகிவிட்டதை நினைத்து எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.