சீனாவில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற 2017 ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவியான மானுஷி சில்லர் உலக அழகிப் பட்டம் வென்றார். மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தாய் நாடு திரும்பியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.