சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆரின் வெண்கல சிலையை ரஜினிகாந்த் திறந்து வைத்தார். நான் எம்.ஜி.ஆர் ஆக முடியாது, ஆனால் எம்.ஜி.ஆர் போல் ஆட்சியைத் தருவேன், இனிமேல் தான் ஆன்மிக அரசியலை பார்க்கப்போகிறீர்கள், நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறான் என்றார். இவ்விழாவில் நடிகர்கள் பிரபு, விஜயகுமார், கலைப்புலி தாணு, கே.எஸ்.ரவிகுமார், விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.