தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தால் ஓரிரு பேருந்துகளை தவிர பெரும்பாலான பேருந்துகள் மாவட்டங்களில் இயங்கவில்லை. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் கட்டணங்களை உயர்த்தி அதிகமாக வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு சுமை கட்டணம் என்று எழுதப்பட்ட பயணச் சீட்டுகளை வழங்கி வருகின்றனர்.