தசரா பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பண்டிகையின் இறுதி நாளன்று ராம்லீலா மைதானத்தில் ராவண வதம் நடைபெறுவதையொட்டி அங்கு 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ராவணனின் உருவ பொம்மைக்கு மோடி அம்பு எய்தி தீ வைத்து எரிக்கப்பட்டது. இவ்வாறு செய்தால், தீய சக்திகள் அழிந்து நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.