கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் சமூக இடைவெளியை பராமரிக்க, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் இன்று 41வது நாளாக தொடர்கிறது.