ஸ்ரீபெரும்புதூரில் நான்காயிரம் கோடி மதிப்பீட்டில் சியட் டயர் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்தத் தொழிற்சாலையின் மூலம் நேரடியாக 1,000 பேரும், மறைமுகமாக 10,000 பேர் வேலைவாய்ப்புகளை பெறுவதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றார்.