பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரயில்களில் அலைமோதும் கூட்டம்
தொடர் விடுமுறைகள் அதிகமுள்ள நாட்களிலும், பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு படையெடுப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதிலும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களிலும், முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் இடம் பிடிக்க பயணிகள் நீண்ட தூரத்துக்கு பல மணி நேரம் வரிசையில் காக்க வேண்டியுள்ளதால், சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.