பெங்கள் பண்டிகை வெகு விமரிசையாக மஞ்சள், கரும்புகளை சுற்றி வைத்து பொங்கல் பண்டிகையை மாணவியர் கொண்டாடினர். மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி, சேலைகளை அணிந்து வந்து பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கல்லூரி வளாகத்தில் கீற்றுக் கொட்டகைகள் அமைத்து மாக்கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி, செங்கற்கள் கொண்ட அடுப்பில் விறகுகளால் தீ மூட்டி மண்பானையில் பச்சரிசி வெல்லத்துடன் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என மாணவியர் உற்சாக குரல் எழுப்பினர். இதை தொடர்ந்து உறியடி, கோலப் போட்டி, மருதாணி போடுதல், இயல் இசை, நடனம், ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.