சென்னையில் கரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை பணி இன்று நடைபெற்றது. சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி ஒத்திகையைத் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு ஒத்திகை நடைபெற்றது.
சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை இன்று நடைபெற்றது.
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சாந்தோம் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஈக்காட்டுதாங்கல் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.