குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள், உயர் அதிகாரிகள்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வீர் சக்ரா விருது வழங்கி கெளரவித்தார்.
துணை அட்மிரல் அனில் குமார் சாவ்லாவுக்கு 'பரம் விசிஷ்ட் சேவா' விருது வழங்கி கெளரவித்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
ராஷ்டிரிய ரைபிள்ஸ் 42வது பட்டாலியன் பிரிவை சார்ந்த நாயக் நரேஷ் குமாருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 'சௌர்ய சக்ரா விருது' வழங்கி கெளரவிப்பு.
மேஜர் ஜெனரல் விரிந்தர் சிங் ரந்தவாவுக்கு 'அதி விஷிஷ்ட் சேவா விருது' வழங்கி கெளரவிப்பு.
கேப்டன் மகேஷ்குமார் பூரேவுக்கு 'சௌர்ய சக்ரா விருது' வழங்கி கெளரவிப்பு.
துணை கமாண்டன்ட் ஹர்ஷ்பால் சிங்குக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 'கீர்த்தி சக்ரா விருது' வழங்கி கெளரவிப்பு.
மேஜர் ஜெனரல் ராஜேஷ் சோப்ராவுக்கு 'அதி விஷிஷ்ட் சேவா விருது' வழங்கி கெளரவித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் அமர்ஜித் சிங் பேடிக்கு 'பரம் விசிஷ்ட் சேவா விருது' வழங்கி கெளரவிப்பு.
தன்னுயிரை ஈந்த மேஜர் விபூதி சங்கர்க்கு (மரணத்திற்குப் பின்) 'சௌரிய சக்ரா விருதினை அவருடைய மனைவி மற்றும் தாயிடம் வழங்கி கெளரவிப்பு.
லெப்டினன்ட் கர்னல் அஜய் சிங் குஷ்வாவுக்கு சௌர்ய சக்ரா விருதினை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிப்பு.
சப்பர் பிரகாஷ் ஜாதவுக்கு (மரணத்திற்குப் பின்) கீர்த்தி சக்ரா விருதினை அவரது தாய் மற்றும் மனைவி ராணி பிரகாஷ் ஜாதவிடம் வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
சுபேதார் சோம்பிர் (மரணத்திற்குப் பின்) சௌரிய சக்ரா விருதினை அவரது தாய் மற்றும் மனைவியிடம் வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.