இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வழக்கில் வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உற்சாகத்துடன் குவிந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களுடன் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்ற ஸ்டாலின், தலைவர் கலைஞர் அவர்களிடம் தீர்ப்பு விவரங்களை தெரிவித்தார். முன்னதாக, மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.