தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை பெரும்பான்மையை நிரூபித்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மெரீனா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதி, எம்ஜிஆர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். உடன் அதிமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், அமைச்சர்கள். தொடர்ந்து அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா எடுத்த சபதம் நிறைவேறியுள்ளது என்றார்.