மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக, நீதி விசாரணை கேட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர், உண்ணாவிரதம் தொடங்கினர். சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான உண்ணாவிரதம் போராட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் பென்னையன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல் ஆவடியில் முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன், காஞ்சிபுரத்தில் எம்.பி., மைத்ரேயன், கோவையில் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தலைமையில் இந்த உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.