மகாராஷ்டிர முதல்வராக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார். மும்பை சிவாஜி பூங்காவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய், ஜெயந்த் பாட்டீல், சாகன் புஜ்பால், பாலாசாகேப் தோரத் மற்றும் நிதின் ரௌத் ஆகியோர் அமைச்சர்களாப் பதவியேற்றேனர்.