தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டத்தை திருச்சியை அடுத்த சிறுகனூரில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சிக் கொடி ஏற்றி நிகழ்வுகளை தொடங்கி வைத்தார்.
திருச்சியை அடுத்த சிறுகனூரில் 750 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட பொதுக் கூட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.
பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக திமுக-வின் 11ஆவது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது.
பொதுக் கூட்ட திடலுக்கு வந்த ஸ்டாலினுக்கு மேள, தாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இரண்டு லட்சம் பேர் அமர்ந்து பொதுக் கூட்ட நிகழ்வுகளை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன.
நிகழ்ச்சியில், கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு, பொதுச் செயலர் துரை முருகன், முதன்மைச் செயலர் கே.என். நேரு, எம்பி-க்கள் கனிமொழி, ஆ. ராசா, திருச்சி சிவா மற்றும் பலர் பங்கேற்றனர்.
மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்.