புண் உள்ள இடத்துக்கு தகுந்தவாறு அறிகுறிகள் வேறுபடும். உணவுக் குழாயில் புண் (Oesophageal Ulcer); உள்ள நிலையில் நெஞ்சில் எச்சல் ஏற்படும். புகை, மதுப் பழக்கம் இருந்தால் இந்த எச்சல் அதிகமாகும்.
சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற கொழுப்புச் சத்து நிறைந்தவற்றை தொடர்ந்து சாப்பிடும் நிலையில் உணவுக் குழாயிலிருந்து இரைப்பைக்குச் செல்லும் இடத்தில் உள்ள சுருக்குத் தசை விவடைந்து, இரைப்பையிலிருந்து அமிலம் மேல் நோக்கி வரும்.
மனித உடற்கூறு இயலின்படி வாயிலிருந்து வயிறு வரை ஒருவழிப் பாதைதான். சாலையில் ஒரு வழிப் பாதையில் செல்லும் நிலையில் விபத்து ஏற்படலாம் அல்லது போலீஸ்காரர் இல்லாவிட்டால் விபத்து இல்லாமல் அன்றைய விதி மீறல் போய் விடும்.
ஆனால், வாய்-உணவுக் குழாய்-இரைப்பை ஒரு வழிப் பாதையாக இருப்பதற்கு, வயிற்றை உணவுக் குழாய் நெருங்கும்போது உள்ள சந்திப்பில் உள்ள சுருக்கத் தசையே (Sphincter) காரணம். இது ஒரு சிறப்புத் தன்மையாகும்.
புகை, மதுப் பழக்கம், அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் காரணமாக இந்த சுருக்கத் தசையை விவடையச் செய்து பிரச்னையை வரவழைத்துக் கொள்கிறோம். எனவே சுருக்கத் தசைக்கு முதல் மயாதை கொடுத்து புகை-மது போன்ற கெட்ட பழக்கங்களை விட்டு விடுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.