எப்போதும் கண் எரிச்சலா?

கணினியில் பணியாற்றுபவர்களுக்கும், எப்போதும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து தவம் இருப்பவர்களுக்கும் ஏற்படும் ஒரு சில பிரச்னைகளில் ஒன்றுதான் கண் எரிச்சல்.கண் எரிச்சலைப் போக்க எளிதான எத்தனையோ வீட்டு வைத்தியங்களும் கை வைத்தியங்களும் உள்ளன.
எப்போதும் கண் எரிச்சலா?
Updated on
1 min read

கணினியில் பணியாற்றுபவர்களுக்கும், எப்போதும் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து தவம் இருப்பவர்களுக்கும் ஏற்படும் ஒரு சில பிரச்னைகளில் ஒன்றுதான் கண் எரிச்சல்.

கண் எரிச்சலைப் போக்க எளிதான எத்தனையோ வீட்டு வைத்தியங்களும் கை வைத்தியங்களும் உள்ளன.

அவற்றில் முக்கியமானதும், பலருக்கும் இதுவரை தெரியாததும், மிகவும் எளிதானதுமான ஒரு குறிப்பை இங்கே தருகிறோம்.

அதாவது, கண் எரிச்சல் இருக்கும் நபர்கள், 4 மஞ்சள் சாமந்தி பூக்களை (சாதாரணமாக சாமிக்கு வைக்க நாம் வாங்கும் சாமந்திதான்) காம்பை நீக்கிவிட்டு ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த பூக்களை போட்டு 4 மணி நேரம் ஊற விடவும்.

பிறகு இந்த நீரைக் கொண்டு கண்களை கழுவி வந்தால் கண் எரிச்சல் விரைவிலேயே உங்களை விட்டு விலகிவிடும்.

என்ன மிக எளிதான விஷயம்தானே.. அப்புறம் ஏங்க கண் எரிச்சலோடு இருக்க வேண்டும்.. உடனே செய்து நிவாரணம் பெறுங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் சொல்லுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com