இதயம் சார்ந்த பிரச்னைகளை முற்றிலும் குணப்படுத்தும் அற்புத தேனீர்

தாமரைப் பூ இதழ்களை சுத்தப்படுத்தி நிழலில் உலர்த்தி அதனுடன் சுக்கு மற்றும் ஏலக்காயை சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும்.
இதயம் சார்ந்த பிரச்னைகளை முற்றிலும் குணப்படுத்தும் அற்புத தேனீர்
Published on
Updated on
1 min read

தாமரைப் பூ தேனீர்

தேவையான பொருட்கள்

தாமரைப் பூ. - அரைக் கிலோ
சுக்கு - 50 கிராம்
ஏலக்காய் - 50 கிராம்

செய்முறை : தாமரைப் பூ இதழ்களை சுத்தப்படுத்தி நிழலில் உலர்த்தி அதனுடன் சுக்கு மற்றும் ஏலக்காயை சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் அளவு தூள் எடுத்து  இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பால் மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும். 

பலன்கள் : இந்த தேனீரை தினமும் குடித்து வந்தால் தீராத மனம் சார்ந்த பிரச்னைகள், தூக்கமின்மை குறைபாடு, படபடப்பு மற்றும் இதயம் சார்ந்த குறைபாட்டை முற்றிலும் சீர் செய்யும் அற்புத தேனீர்

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com