மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

கொட்டித் தீர்க்கும் வியர்வையை சமாளிக்க என்ன செய்யலாம்?

கோடை காலம் ஆரம்பித்து, வெயில் நம்மை வாட்டிக் கொண்டிருக்கிறது.

News image
Updated On :2 மே 2019, 11:18 am IST

கோடை காலம் ஆரம்பித்து, வெயில் நம்மை வாட்டிக் கொண்டிருக்கிறது. உடுத்தும் உடைகள் அனைத்தும் வியர்வையால் முழுமையாக ஈரமாகிவிடுகிறது. இதனால் கோடை காலங்களில் வெளியில் செல்வது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகிவிட்டது.

Story image

வியர்வை அதிகம் வெளிவந்தால், அது உங்களின் மீது துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நம் அருகில் இருப்போரின் முகத்தை அது சுளிக்கச் செய்யும். எனவே, கோடையில் வியர்வையை சமாளிக்க தினமும் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.

Story image

அதோடு இந்தக் கோடையில் கிடைக்கும் இளநீர், பனை நுங்கு, பதநீர் போன்றவற்றை பருக வேண்டும். இதனால் வியர்வை கட்டுப்படும்.

Story image

கோடை காலங்களில் தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சியடைவது மட்டுமல்லாமல், உடலில் துர்நாற்றம் ஏற்படாமலும் பாதுகாக்கலாம். 

Story image

ஆடை அணியும் முன்னர் உடலில் ஈரம் இல்லாதவாறு நன்றாக துடைக்க வேண்டும். ஈரமாக இருக்கும் போது ஆடை அணிந்தால் அது துர்நாற்றம் ஏற்பட காரணமாக அமையும்.

Story image

முடி அதிகமாக வைத்திருப்பவர்கள் அவற்றை முறையாக பராமரித்தல் மிகவும் அவசியம். ஏனெனில், அவற்றினால் ஏற்படும் வியர்வை, சில சமயங்களில் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். மேலும், இந்த வெப்ப நிலையில் பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் எளிதாக வளரக் கூடியது.

Story image

கோடை காலங்களில் அதிகம் காரமான உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக அதிகமாக வியர்க்கும் பிரச்னை உள்ளவர்கள் உணவில் குடை மிளகாய், பச்சை மிளகாய் போன்றவற்றை அதிகம் சேர்க்கக் கூடாது. ஏனெனில், காரமான உணவுகள் அதிகம் வியர்ப்பதற்கு காரணமாக அமைகிறது. தயிர் சாதம் சிறிதளவு தினமும் சாப்பிடலாம். மோர் குடிப்பது உடலுக்கு நல்லது.

Story image

குளிக்க பயன்படுத்தும் நீரில் எலுமிச்சை சாற்றை சிறிது கலந்து குளிப்பதன் மூலம் உடலில் ஏற்படும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தலாம்.

Story image

கோடை காலங்களில் விசாலமான பருத்தி ஆடைகளை அணிவது தான் சிறந்தது. பருத்தி ஆடைகள் அணிவதன் மூலம் வியர்வையிலிருந்து விலகி இருக்க முடியும்.

Story image

பகலில் வெளி இடங்களுக்கு செல்லும் போது வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். இவைகள் வியர்வையினால் வெளிவரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும்.
 - மு.சுகாரா, திருவாடானை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.