மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க எளிய மருந்து!

எலுமிச்சை பழத்தில் இருந்து வெளிவரும் நறுமணம், மூளையில் செரடோனின் எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும்.
மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க எளிய மருந்து!

எலுமிச்சை பழத்தில் இருந்து வெளிவரும் நறுமணம், மூளையில் செரடோனின் எனும் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கும். மனநிலையில் மகிழ்ச்சியும், நேர்மறையான எண்ணங்களும் உருவாகி மனம் அமைதியாகும்.

உடலும் மனமும் அமைதியாக, மன அழுத்தம் குறைய வேண்டும் என நினைத்தால் இரவில் படுக்கும் போது ஒரு துண்டு எலுமிச்சையை அருகில் வைத்துக் கொண்டு உறங்கச் செல்லுங்கள். இரவு முழுவதும் அதன் காற்றினை சுவாசித்து மறுநாள் காலையில் உடல் புத்துணர்ச்சியுடனும், ஆற்றலுடனும் இருப்பதைப் பார்க்கலாம்.

எலுமிச்சை பழத்திலிருந்து வெளிவரும் நறுமணம் உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. தினமும் இரவு படுக்கும் போது எலுமிச்சைத் துண்டுகளை படுக்கை அருகில் வைத்திருப்பது நல்லது.

சிலருக்கு இரவில் தூங்கும் போது மூக்கடைப்பு பிரச்னைகள் ஏற்படும். அதனால் ஏற்படும் தூக்கமின்மை பிரச்னையை தடுக்க, எலுமிச்சையை அருகில் வைத்து தூங்கினால், மூக்கடைப்பு நீங்க சுவாசிக்கும் திறன் மேம்படும்.

எலுமிச்சை இயற்கை பூச்சிக்கொல்லி என்பது ஆச்சரியமான உண்மை. சிறிய எலுமிச்சை துண்டை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதால், அதிலிருந்து வரும் நறுமணத்தால் பூச்சிகள் நம்மிடம் நெருங்காது.

எலுமிச்சை காற்றில் உள்ள அசுத்தத்தை உறிஞ்சி, சுத்தமான காற்றை வழங்குவதுடன், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை உறிஞ்சி, சுத்தமான காற்றை சுவாசிக்க உதவும் அரிய மருந்தாக செயல்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com