ஒமம், கோதுமை, மஞ்சள் இவை மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, வீக்கம் உள்ள இடங்களில் பற்றுப் போட்டுவந்தால் மூன்றே நாள்களில் வீக்கம் கரையும்.
ஒமம், இஞ்சி இவை இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவில் 48 நாள்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் பெருவயிறு குறையும்.
ஒமம், நாவல் கொட்டை, துத்தி, பிரண்டை இவை அனைத்திலும் தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து, இரண்டு கிராம் பொடியை காலை, மாலை சாப்பிட்டு வந்தால், ரத்த மூலம் உடனே குணமாகும். மூலக்கிருமிகளும் அழியும்.
ஒமத்தை நல்லெண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி வடி கட்டி, தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், சைனஸ் எனப்படும் பீனிச நோய் குணமாகும்.
ஒமம் , மிளகு இவை இரண்டும் தலா 50 கிராம் , பனைவெல்லம் (100 கிராம்) ஆகியவற்றை இடித்துப் பொடியாக்கி நெல்லிக்காய் அளவு காலையிலும் ,இரவிலும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், பேதி போன்றவை குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com