பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். சைனஸ், நீர்வேட்கை , மலச்சிக்கல் போன்றவையும் குணமாகும்.
பேரீச்சங்காயை (50 கிராம்) கொட்டையை நீக்கி, அதனுடன் சுக்கு, மாம்பருப்பு சிறுநாகப் பூ, கசகசா இவை அனைத்தையும் தலா 25 கிராம் எடுத்துப் பொடிசெய்து கொள்ளவும். இவற்றை 10 கிராம் பொடியை தினமும் மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் ரத்தமூலம் குணமாகும்.
பேரீச்சங்காயை கொட்டையை நீக்கி, தேனில் ஊறவைத்து 48 நாட்களுக்குத் தினமும் அதிகாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு, வாயுக் கோளாறுகள் குணமாகும்.
கண்பார்வை தெளிவடைய இப்பழத்தில் காணப்படும் விட்டமின் ஏ கண்குறைபாடுகளை சரிசெய்கிறது. மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்வர்கள் பேரீச்சம் பழத்தினை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவடையும். உடலுக்குத் தேவையான எல்லாச் சத்துக்களும் கிடைக்கப் பெற்று உடல்நலம் மேம்படும்.
பெண்களின் நலனுக்கு பெண்களுக்கு கால்சியமும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கால் இவ்விரு சத்துக்களும் குறைகின்றன. இச்சத்துக்களை திரும்பப் பெறவும், ஒழுங்கற்ற மாத விலக்கைச் சரிசெய்யவும் இப்பழம் மருந்தாகிறது.
மெனோபஸ் காலங்களில் பெண்களுக்கு எலும்புகள் பலவீனமடையும். கை, கால், மூட்டுகளில் வலி தோன்றும். இதனைச் சரிசெய்ய பேரீட்சையை பாலில் கொதிக்க வைத்து பாலுடன் பழத்தினை உண்டால் மேற்கண்ட பிரச்சினைகள் குறையும்.
KOVAI HERBAL CARE கோவை பாலா, இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist Cell : 96557 58609 Covaibala15@gmail.com