மாங்கொட்டையை இடித்து சாறு எடுத்து , அந்தச் சாற்றில் இரண்டு சொட்டுகளை மூக்கில் விட்டால் மூக்கில் ரத்தம் வருவது நிற்கும்.
மா மர பிசினை எடுத்து, தண்ணீர் ஊற்றிக் கரைத்து காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் பித்த வெடிப்பு விரைவில் குணமாகும்.
மா மரத்தில் இருந்து துளிர் இலைகளைப் பறித்து, காயவைத்து பொடி செய்து, 48 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுபடும்.
மாம் பூ, மாதுளைப் பூ, வாழைப் பூ - மூன்றையும் சம அளவு எடுத்து , உப்பு, புளி , மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தலாம்.
மாம் பருப்பை, பால் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.
மாம் பருப்பு, மாதுளை, கொய்யா இலை இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து நன்றாகப் புளித்த தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நிற்கும்.
மாங்கொட்டைப் பருப்பை நன்றாகக் காயவைத்துப் பொடி செய்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் அழியும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com