வேளைக் கீரை, குடை மிளகாய், பூண்டு இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகக் கொழுப்பு கரையும்.
வேளைக் கீரையை மஞ்சள் சேர்த்து அரைத்து அடிவயிற்றில் பற்றுப்போட்டால், தடைபட்ட மாதவிலக்கு சீராகும்.
வேளைக் கீரையைச் சாறு எடுத்து ஒரிரு துளிகள் காதில் விட்டுக்கொண்டால் காதுவலி குணமாகும்.
வேளைக் கீரையுடன் சீரகம், மஞ்சள் இவை இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் நன்றாகப் பசி எடுக்கும்.
வேளைக் கீரையை நன்றாக அரைத்து தொப்புளில் பற்றுப்போட்டு வந்தால் நீர்க்கடுப்பு உடனே சரியாகும்.
வேளைக் கீரையைப் பூண்டு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
வேளைக் கீரை, தாமரைப் பூ இவை இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்துக் குடித்துவந்தால் நெஞ்சு வலி உடனே குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609