மிளகாய் (4), பூண்டு (4 பல்), மிளகு(10), மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து தடவினால் வலி, வீக்கம் போன்றவை குணமாகும்.
மிளகாயை (3)அரிந்து, சிறிது மஞ்சள் சேர்த்து கஷாயம் காய்ச்சி மூன்று நாள்களுக்குக் குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு, வயிற்று நோய் குணமாகும்.
சிறிது நல்லெண்ணெயில் விதை நீக்கிய மிளகாயைப் போட்டு சூடாக்கி ஆறிய பிறகு, காதில் இரண்டு துளிகள் எண்ணெய் விட்டால் காது வலி, காது குத்தல் போன்றவை தீரும்.
பச்சை மிளகாய் (2), வெல்லம் (சிறிதளவு), புளி (சிறிதளவு) இவை மூன்றையும் சேர்த்து துவையல் அரைத்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் ஜீரணக் கோளாறுகள் வராது.
மிளகாய் வற்றல் (ஓன்று), புளி (சுண்டைக்காய் அளவு) இவை இரண்டையும் நன்றாக அரைத்து மூன்று நாள்களுக்கு காலை மாலை என இருவேளை சாப்பிட்டுவந்தால் வயிற்று உப்புசம் தீரும்.
மிளகாய்வற்றல் (ஒன்று), பூண்டு (2பல்), இவை இரண்டையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் சூதகவலி குணமாகும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com