இஞ்சியைத் தோல் நீக்கி, தண்ணீரில் போட்டுக் காய்ச்சி அதில் பால் (2 கப்), ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, கற்கண்டு ஆகியவற்றைக் கலந்து குடித்து வந்தால் உடல் வனப்பு பெறும். இளமை திரும்பும்.
இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு இவை இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்து தினமும் காலை மாலை என இருவேளை தொடர்ந்து 21 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை விரைவில் கட்டுக்குள் வரும்.
இஞ்சிச் சாறு, துளசிச் சாறு இவை இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்றாகக் கலந்து குடித்து வந்தால் வாயுத் தொல்லை தீரும்.
இஞ்சியுடன், எலுமிச்சம் பழச் சாறு சம அளவு எடுத்து அதனுடன் சீரகம் (1 ஸ்பூன்) சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.
இஞ்சியை தேன் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குணமாகும்.
இஞ்சிச் சாற்றில் மிளகுத் தூள் சேர்த்துக் குடித்து வந்தால் அஜீரண்க் குறைபாடு நீங்கும்.
இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொந்தி கரையும்.
KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும்
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609