சளி , இருமல் நீங்க பனங்கற்கண்டை வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்க வேண்டும். இதனால் சளி, இருமல் மற்றும் தொண்டைக் கரகரப்பு, போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகள் கிடைக்கும்.
கண் பார்வை அதிகரிக்க சிறிதளவு பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் ஆகிய அனைத்தையும் சேர்த்து, இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல், கண்பார்வை திறன் அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பனங்கற்கண்டை பாதாம் பருப்பு மற்றும் மிளகுத் தூள்(சிறிதளவு) ஆகியவற்றுடன் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை தடுக்கலாம்.
தொண்டை வலி குணமாக பனங்கற்கண்டு (ஒரு ஸ்பூன்) , மிளகுத்தூள் (அரை ஸ்பூன்) , நெய் (அரை ஸ்பூன்) ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமாகும்.
உடல் சோர்வு நீங்க பனங்கற்கண்டு (சிறிதளவு) , பசு மாட்டு நெய் (அரை டீஸ்பூன்) , நிலக்கடலை (சிறிதளவு) ஆகியவற்றைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வுகள் நீங்கி, சுறுசுறுப்புத் தன்மை அதிகரிக்கும்.