முகச் சுருக்கம் நீங்கி முகம் பளபளக்க பச்சை உருளைக் கிழங்கை தோலுடன் சிறுசிறு துண்டுகளாக்கி அதனுடன் சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து அதைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வந்தால் முகம் பளபளப்படையும் . முகச் சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்து போகும். இளமையான தோற்றத்தையும் அது தரும்.
வயிற்று எரிச்சல் , வயிறு உப்புசம் நீங்க உருளைக் கிழங்கை எடுத்து நன்கு வேகவைத்து மசித்துச் சூடான பாலுடன் சேர்த்து பருகிவந்தால் அமிலச்சுரப்பு மட்டுப்பட்டு வயிற்று எரிச்சல் மற்றும் வயிறு உப்புசம் நீங்கி தூக்கம் மற்றும் அமைதியான உணர்வு உண்டாகும்.
மூட்டு வலி , வாத வீக்கம் குணமாக உருளைக் கிழங்கை எடுத்து அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் அல்லது உருளைக் கிழங்கினை வேகவைத்த நீரைப் பருகி வருவதன் மூலமும் மூட்டு வலிகள், வாத வீக்கம் ஆகியன குணமாகிறது.
நாட்பட்ட மலச்சிக்கல் குணமாக உருளைக்கிழங்கு சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நீண்ட நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் குடலில் நச்சுக்கள் பெருகி அதனால் ஏற்படும் ரத்த அழுத்தம் டினல் டோக்ஸிமியா தவிர்க்கப்படுகிறது.
வயிறு மற்றும் இரைப்பை சார்ந்த பிரச்சனைகள் நீங்க தினமும் அரை கப் உருளைக்கிழங்கு சாறு எடுத்து காலை மாலை என இருவேளையும் உணவுக்கு முன் குடித்து வந்தால் வயிறு மற்றும் இரைப்பைக் கோளாறுகள் நீங்கும் மேலும் வாயு, அதிக அமிலம் சுரப்பு , வயிற்றுப்புண்கள் போன்றவையும் குணமாகிறது.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com