தோல் சார்ந்த பிரச்சனைகள் தீர அருகம் புல் வேர் , சிறியா நங்கை வேர் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
அருகம் புல் வேரைக் காயவைத்து அரைத்து 100 கிராம் பொடி செய்து அதனுடன் நல்லெண்ணெய் (500 மில்லி) கலந்து சூடுபடுத்தி , உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
நெஞ்சுவலி குணமாக அருகம் புல் வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு கஷாயம் வைத்து குடித்து வந்தால் நெஞ்சு வலி குணமாகும்.
வயிற்றுப் புண் குணமாக அருகம் புல்லை அரைத்து சாறு எடுத்து தினமும் காலை 50 மில்லி அளவுக்கு வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப் புண் குணமாகும்.
பல்வலி குணமாக அருகம் புல் , தூதுவளை வேர் இவை இரண்டையும் கசக்கிச் சாறு எடுத்து ஒரு துளி வீதம் இரண்டு காதுகளில் விட்டால் பல் வலி குணமாகும்.
தலைவலி மறைய அருகம் புல் , ஆல மர இலை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உச்சந்தலையில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி உடனே குணமாகும்.
ஆஸ்துமா , சைனஸ் , சளி நீங்க அருகம் புல்லை (ஒரு கைப்பிடி) இடித்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆஸ்துமா , சளி ,சைனஸ் , நீரிழிவு போன்றவை குணமாகும்.
மாதவிலக்கு பிரச்சனை தீர அருகம் புல்லை அரைத்து சிறிதளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com