அதிக சத்தமான சூழ்நிலையிலும் உங்கள் காது நன்றாக கேட்க வேண்டுமா?

அதிக சத்தமான சூழ்நிலையிலும் உங்கள் காது நன்றாக கேட்க வேண்டுமா?

எண்ணெய்ப் பசை கட்டாயம் ஒரு மனிதனுக்குத் தேவை. நாம் குடிக்கும் ஒரு தம்ளர்

அறிகுறிகள் : எண்ணெய்ப் பசை கட்டாயம் ஒரு மனிதனுக்குத் தேவை. நாம் குடிக்கும் ஒரு தம்ளர் தண்ணீர் செரிப்பதற்குக் கூட எண்ணெய் பசை வேண்டும். அவ்வாறு நமது காதுகளில் உள்ள எண்ணெய் பசை குறையும் போது உண்டாகும் மந்தமாகும் நிலையிலிருந்து விடுபட..

மண்டலம் - எலும்பு மண்டலம்
காய் - கொப்பரைத் தேங்காய்
பஞ்சபூதம் - நெருப்பு
மாதம் - மார்கழி
குணம் - நம்பிக்கை
ராசி / லக்கினம் - தனுசு

சத்துக்கள் : புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை `பி' காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் இருக்கின்றன 

தீர்வு : முற்றின கொப்பரைத் தேங்காய் அல்லது தேங்காய் (100 கிராம்), கோவைக்காய் (5) இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மாலை என இருவேளை குடித்து வரவும். தினமும் தேங்காய் அல்லது கொப்பரைத் தேங்காயை பச்சையாக எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவு எடுத்துக் கொண்டு வந்தால் அதிக சப்தமான சூழ்நிலையில் மட்டும் காது கேட்கும் நிலையிலிருந்து விடுபட முடியும்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com