நன்றாக தூக்கம் வர சீமை அமுக்கரா வேர் நன்கு இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளவும். தினந்தோறும் (5கிராம்) வீதம் இரவில் உணவிற்குப் பிறகு பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல தூக்கம் வரும்.
வயிற்று வலி , வயிற்றுப் புண் குணமாக அதிமதுரம் பொடி (100கிராம்) , சீமை அமுக்கரா பொடி (100 கிராம்) இவை இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு தினமும் 3 வேளை தலா 2 கிராம் வீதம் உணவிற்கு முன் அல்லது பின் சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி, வயிற்றுபுண் குணமாகும்.
ஆண்மைக்குறைவு நீங்க பூனைகாலி விதை (100கிராம்) ,சீமை அமுக்குரா வேர் (100கிராம்) இவை இரண்டையும் இடித்து பொடியாக்கி ஒன்றாகக் கலந்து காலை , மாலை என இருவேளையும் (1ஸ்பூன்) வீதம் பசும்பாலில் கலந்து குடித்து வந்தால் ஆண்மை பெருக்கம் உண்டாகும்.
மூட்டு அழற்சி , பசியின்மை நீங்க அமுக்கரா கிழங்குப் பொடியை (2கிராம்) அளவுக்கு எடுத்து தேனில் குழைத்து காலை மாலை என இருவேளையும் சாப்பிட்டு வந்தால் உடல் பலவீனம், பசியின்மை, மூட்டு அழற்சி, செரிமானக் குறைவு, இருமல், உடல் வீக்கம், முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்கும்.
கை , கால் , இடுப்பு , மூட்டு , தொடை வலி குணமாக அமுக்கரா , சுக்கு , ஏலக்காய் , சித்தரத்தை இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்து அரைத்து வைத்துக்கொண்டு காலை , மாலை என இருவேளையும் தலா 2 கிராம் அளவுக்கு உணவிற்குப் பின் சாப்பிட்டு வத்தால் கை, கால் , மூட்டு , இடுப்பு ,தொடை வலி அனைத்தும் குணமாகும்.
உடல் வலி , அலுப்பு , களைப்பு நீங்க அமுக்கரா பொடியை தினமும் 2ஸ்பூன் அளவு எடுத்து பசும்பாலில் கலந்து உணவிற்குப் பின் சாப்பிட்டு வந்தால் உடல் அலுப்பு, உடல்வலி, களைப்பு மாறும்.
உடல் பருமனாக அமுக்கரா பொடி (2கிராம்) அளவு எடுத்து நெய்யில் கலந்து இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடல் பருமனாகும்.
KOVAI HERBAL CARE VEGETABLES CLINIC கோவை பாலா , இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist Cell : 96557 58609 Covaibala15@gmail.com