உங்கள் முகம் வீங்கி உள்ளதா?

வயதானவர்களுக்கு மூட்டுகளில் உண்டாகும் நீரினை நீக்கவும் மற்றும் சிறுநீரக குறைபாடுகளால் உண்டாகும் கால் வீக்கம்
முடக்கத்தான் திணைப் பூண்டுக் கஞ்சி
முடக்கத்தான் திணைப் பூண்டுக் கஞ்சி

வயதானவர்களுக்கு மூட்டுகளில் உண்டாகும் நீரினை நீக்கவும் மற்றும் சிறுநீரக குறைபாடுகளால் உண்டாகும் கால் வீக்கம் மற்றும் முக வீக்கம் ஆகியவற்றைக் குறைக்க உதவும் உணவு இது

தேவையான பொருட்கள்

முடக்கத்தான் கீரை - ஒரு கட்டு
திணை அரிசி - 100 கிராம்
பூண்டு. - 10 பல்
மிளகு - 10
மல்லித் தழை. - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் திணை அரிசியை லேசாக வறுத்து உடைத்து குருணையாக்கிக் கொள்ளவும்.
  • முடக்கத்தான் கீரையை அலசி ஆய்ந்து அரைத்து சாற்றை வடிக்கட்டி வைத்துக்கொள்ளவும்.
  • பூண்டு மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் 400 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் திணை குருணையைச் சேர்த்து வேக வைக்கவும்.
  • நன்கு வெந்து கஞ்சி பக்குவம் வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் முடக்கத்தான் சாற்றை சேர்த்து ஒன்றாக கலக்கி ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கிப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி வைக்கவும்.

பயன்கள்

  • இந்தக் கஞ்சியை வயதானவர்களுக்கு மூட்டுகளில் உண்டாகும் நீரினை நீக்க ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
  • மேலும் சிறுநீரக குறைபாட்டினால் உண்டாகும் கால் வீககம் மற்றும் முக வீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கஞ்சியை மருந்தாக ஒரு வேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com