Enable Javscript for better performance
corona count up by 217 in gujarath ! குஜராத்தில் மேலும் 217 பேருக்கு கரோனா பாதிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    குஜராத்தில் மேலும் 217 பேருக்கு கரோனா பாதிப்பு

    By   |   Published On : 01st January 1970 05:30 AM  |   Last Updated : 01st January 1970 05:30 AM  |  அ+அ அ-  |  

     

    காந்தி நகர்: குஜராத்தில் வியாழனன்று மேலும்  217 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 21,797 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 681 பேர் பலியாகியுள்ளனர்.

    மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு  முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, தற்போது மே மாதம் 3-ஆம் தேதி வர நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் குஜராத்தில் வியாழனன்று மேலும்  217 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், ‘வியாழனன்று மட்டும் புதிதாக 217 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாநிலத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  2,624 ஆக உயர்ந்துள்ளது.  அத்துடன் கரோனா பாதிப்பால் இன்று மட்டும்  9 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனா மூலமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp