தில்லியில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை வேகமாக நடைபெற வேண்டும் என்று அவரது ஆண் நண்பர் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில், அமாசி விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
இந்த வழக்கு விசாரணை விரைவாக, மூன்று மாதங்களுக்குள் முடிவடைய வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் கோரிக்கை. இப்போது இந்த வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தனது கடமையைச் செய்து வருகின்றனர். இதை அவர்களிடமே விட்டு விடுவோம்.
"விரைவு நீதிமன்றங்களை அமைப்போம்' என்று சொல்வதே பொருத்தமற்றதாக உள்ளது. அப்படியானால் மற்ற நீதிமன்றங்கள் மெதுவான நீதிமன்றங்களா? மக்கள் தங்களது வழக்குகளில், குறிப்பாக இது போன்ற வழக்குகளில் விரைவாக நீதியைப் பெற வேண்டும்.
அனைத்து நீதிமன்றங்களும் துரிதப்படுத்தப்பட்டு, இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் சட்டத்தின் முன் விரைவாக நிறுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.