ராஜஸ்தானை வாட்டும் குளிர்: மைனஸ் 0.4 டிகிரி செல்சியஸுக்கு குறைந்தது

ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் வீசி வரும் கடும் குளிர்காற்று காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் வீசி வரும் கடும் குளிர்காற்று காரணமாக இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சாரு நகரின் வெப்பநிலை மைனஸ் 0.4 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக உள்ளது.

வடமேற்காக வீசி வரும் குளிர்காற்றில் மாநிலம் முழுவதும் ஒன்று முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்துள்ளது.

வடக்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் 10 ரயில்கள் 30 நிமிஷங்கள் முதல் 9 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன. மேலும் கடும் பனிமூட்டம் காரணமாக தில்லி, ஹரியானா, உத்ர பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இயக்கப்படும் ரயில்கள் 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன என ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் கூறினார்.

இதனிடையே ஜெய்ப்பூரில் இன்று காலை 5.4 டிகிரி செல்சியஸ் மட்டுமே பதிவானது. இது வழக்கமான குறைந்த வெப்பநிலையைவிட 5 டிகிரி குறைவாகும். இதேபோல சிக்கரில் குறைந்த வெப்ப நிலை 3.5 டிகிரியாகவும், ஸ்ரீகங்ககாநகரில் 3.9 டிகிரியாகவும் பதிவானது.

தார்பாலைவனத்தின் நுழைவுவாயில் என்ற அழைக்கப்படும் சாரு நகரின் வெப்பநிலை மைனஸ் 0.4 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக உள்ளது.

வரும் 24 மணி நேரத்துக்கு இதே குளிர்நிலை தொடரும் என்றும், வெப்பநிலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது என்றும், வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com