

கேரள மாநிலத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று அம்மாநில பாரம்பரியத்துடன் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேவாயலங்களில் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. தேவாலயங்களில் கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் வகையில் தேவாலய மணிகள் அடிக்கப்பட்டன. தேவாலய பிஷப்கள் தங்களது கிறிஸ்துமஸ் செய்திகளை மக்களுக்கு அறிவித்தனர்.
தேவாயலங்களும், வீடுகளும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பலரும் புத்தாடை உடுத்தி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.