

மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா விமான சேவையில் குறைந்த பயண நேரம் கொண்ட விமானங்களின் 2ம் வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்கு இனி அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி வரை பயண நேரம் கொண்ட ஏர் இந்திய விமான சேவைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இனி அசைவ உணவு வழங்கப்பட மாட்டாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
தற்போது ஏர் இந்தியா விமானங்களில் சைவ மற்றும் அசைவ சான்ட்விட்ச்கள் மற்றும் கேக் வகைகள் பரிமாறப்பட்டு வருகிறது. ஜனவரி 1ம் தேதி முதல், குறைந்த பயண நேர விமான சேவைகளில் பரிமாறப்படும் அனைத்து உணவுகளும் சைவ உணவுகளாக மாற்றப்பட உள்ளது.
ஜனவரி 1ம் தேதி முதல் எகனாமிக் வகுப்புகளில் பயணம் செய்யும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் சூடான சைவ உணவு பரிமாற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கடந்த வாரமே அறிவிப்பு வெளியிடப்பட்டது.
எங்களது உணவுத் தரத்தை உயர்த்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை வெறும் சான்ட்விட்ச் மற்றும் கேக் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இனி சூடான உணவு வழங்க திட்டமிட்டதாக மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.