தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சரக்கு-சேவை வரி மசோதா, இந்தியாவில் லகுவான தொழில் ஆகியவற்றுக்கு முன்னுரிமை- ஜேட்லி

வரும் ஆண்டில் சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதற்கும், இந்தியாவில் லகுவான முறையில் தொழில் மேற்கொள்வதற்கும் முன்னிரிமை அளிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

News image
Updated On :27 டிசம்பர் 2015, 9:44 am

வரும் ஆண்டில் சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதற்கும், இந்தியாவில் லகுவான முறையில் தொழில் மேற்கொள்வதற்கும் முன்னிரிமை அளிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

நிகழ் ஆண்டில் உலக அளவில் பொருளாதர நிலையில் தடுமாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவில் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணல் விவரம்:

உலக அளவில் பொருளாதார நிலையில் தேக்கம் நிலவினாலும், இந்திய பொருளாதாரம் 7 முதல் 7.5 சதம் வரை வளர்ந்துள்ளது. இது வரும் மாதங்களில் மேலும் வளர்ச்சியடையும்.

சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதற்கும், நேரடி வரிவிதிப்பு முறையை சீரமைப்பதற்கும், இந்தியாவில் வியாபாரம்-தொழில் செய்வதற்கு தேவையான கால சூழ்நிலையை உருவாக்குவதற்கும் வரும் காலங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

உள்கட்டமைப்பு, சமூக உள்கட்டமைப்பு, பாசன வசதியை ஏற்படுத்துவதற்கும் அதிக நிதி ஒதுக்கப்படும்.

கச்சா எண்ணெய் விலை குறைவால் கிடைத்த பணம் மூலம் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள், ஊரக சாலைகள் மற்றும் ரயில்வே துறைக்கு போதிய அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.