

வரும் ஆண்டில் சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதற்கும், இந்தியாவில் லகுவான முறையில் தொழில் மேற்கொள்வதற்கும் முன்னிரிமை அளிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
நிகழ் ஆண்டில் உலக அளவில் பொருளாதர நிலையில் தடுமாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவில் அது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த நேர்காணல் விவரம்:
உலக அளவில் பொருளாதார நிலையில் தேக்கம் நிலவினாலும், இந்திய பொருளாதாரம் 7 முதல் 7.5 சதம் வரை வளர்ந்துள்ளது. இது வரும் மாதங்களில் மேலும் வளர்ச்சியடையும்.
சரக்கு-சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதற்கும், நேரடி வரிவிதிப்பு முறையை சீரமைப்பதற்கும், இந்தியாவில் வியாபாரம்-தொழில் செய்வதற்கு தேவையான கால சூழ்நிலையை உருவாக்குவதற்கும் வரும் காலங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
உள்கட்டமைப்பு, சமூக உள்கட்டமைப்பு, பாசன வசதியை ஏற்படுத்துவதற்கும் அதிக நிதி ஒதுக்கப்படும்.
கச்சா எண்ணெய் விலை குறைவால் கிடைத்த பணம் மூலம் உள்கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள், ஊரக சாலைகள் மற்றும் ரயில்வே துறைக்கு போதிய அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.